Monday, August 22, 2005

தாடிக்கு ஒரு நினைவுச் சின்னம்

'எதற்காகத் தாடி வளர்க்கிறீர்கள்?', 'மிகவும் சோகமான தோற்றத்தைத் தருகிறது', 'இது நல்லாவே இல்லை'.. எனப் பல விமர்சனங்களைத் தாண்டி இரண்டு மாதங்களுக்கு மேல் தாடி வளர்த்தேன். இதற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு.

பார்ப்பவர் எல்லாரும், 'அண்ணாகண்ணன் என்ற பெயரைப் படித்ததும் வயதானவராக இருப்பார் என்று நினைத்தோம். ரொம்ப சின்னவராக இருக்கிறீர்கள்' என்றார்கள். சரி, வயதைக் கொஞ்சம் கூட்டிக் காட்டலாம் என்று தாடி வளர்க்கத் தொடங்கினேன்.

நண்பர்கள், வீட்டார், அலுவலகத்தினர் என எல்லோரும் ஒருமித்த குரலில் தாடிக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்கவே, எடுக்கத் தீர்மானித்தேன். அடுத்த நாள் எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தவுடன் நினைவுச் சின்னமாக இருக்கட்டும் என்று நண்பரைக் கூப்பிட்டுப் படம் எடுக்கச் சொன்னேன். படம் எடுத்த அடுத்த நாள், இந்தத் தாடியைச் சவரக் கலைஞருக்குத் தானமாய்க் கொடுத்தேன்.














தாடிக்கு ஒரு நினைவுச் சின்னம் / 2005 / படம் எடுத்தவர் : கிளிக் ரவி

No comments: