என் அம்மா சவுந்திரவல்லியின் 60ஆவது பிறந்த நாளை 24.6.2006 அன்று, ஆதரவற்றோர் இல்லத்து மாணவர்களுக்கு மதிய உணவளித்துக் கொண்டாடினோம்.
சீர்காழிக்கு அருகில் உள்ள புதுத்துறை மண்டபம் என்ற ஊரில் 1947ஆம் ஆண்டு கல்யாணம் - வஞ்சுளவல்லி ஆகியோருக்கு மூத்த மகளாகப் பிறந்த என் அம்மா, 5ஆம் வகுப்பு வரை பள்ளிக்குச் சென்றவர். நல்ல குரல் வளம் உள்ளவர்.
20 வயதில் என் அப்பா குப்புசாமியை மணந்த அவர், 4 பிள்ளைகள் பெற்று, ஆளாக்கி உள்ளார். வாழ்க்கையின் கடும் சோதனைகளின் போதும் துணிச்சலுடன் போராடி, எமக்கு வலுவூட்டிய எம் அன்னைக்கு 24.6.2006 அன்று 60 வயது தொடங்கியது.
அதைச் சிறு அளவில் கொண்டாட விழைந்தோம்.
என் அம்மாவின் ஒப்புதலின் படியும் விருப்பத்தின் படியும் சென்னை அம்பத்தூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்றோம். அங்கிருந்த சுமார் 80 மாணவர்களுக்கு மதிய உணவளித்தோம்.
கிறித்தவ சமூகத்தினரால் நடத்தப்படுகிற அந்த இல்லத்து மாணவர்கள், இறை வணக்கம் பாடி, பிறகு உணவருந்தினார்கள்.
அம்மாவும் அக்கா வேதவல்லியும் உறவினர் ஆண்டாளும் நானும் மாணவர்களுக்குப் பரிமாறினோம்.
மாணவர் எவரும் கொஞ்சம்கூட வீணடிக்காமல் சாப்பிட்டார்கள் என்பது எமக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது.
பிறகு அவர்களுடன் சேர்ந்து குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
சிறிய அளவில் திட்டமிட்டதால் மிகச் சிலரையே அழைத்திருந்தோம். என் இளைய அக்காள் வேதவல்லி பாலாஜியின் வீட்டில் சிறு நிகழ்ச்சியும் வைத்திருந்தோம். மாடியில் வண்ணத் துணிப் பந்தல் (ஷாமியானா) கட்டி, விருந்தினர்களுக்கு விருந்தளித்தோம்.
எம் அழைப்பை ஏற்று, என் நண்பர்கள் காந்தளகம் உரிமையாளர் மறவன்புலவு க.சச்சிதானந்தன், நட்டுவாங்க வித்தகர் சசிரேகா, அவரின் பெற்றோர், ஓவியர் பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் கார்த்திகேயன், கன்னட சிஃபி ஆசிரியர் தயானந்த் பட், காயத்ரி, உறவினர்கள் சேஷகோவிந்தராஜன் - மீரா, கோகுல் - பத்மஜா, பிரசன்னா - ரம்யா, குழந்தைகள் காயத்ரி, பிரீதி, ஸ்ருதி, கஜா, அபிநயா, அரவிந்த் உள்ளிட்ட பலரும் மேலும் அக்கம் பக்கத்திலிருந்து சிலரும் நேரில் வந்து சிறப்பித்தார்கள்.
சசிரேகா இனிய பாடல் ஒன்று பாடினார். இந்த நிகழ்ச்சியை ஒட்டி, நண்பர் கன்னிக்கோயில் ராஜா, குறுஞ்செய்தி மூலம் என் சார்பில் பலரையும் அழைத்திருந்தார். நேரில் வர முடியாத பலரும் குறுஞ்செய்தி மூலமும் தொலைபேசி மூலமும் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.
அம்மாவுக்கு நீரிழிவு இருந்தாலும் பேரக் குழந்தைகளின் விருப்பத்திற்காக கேக் ஒன்று வாங்கி வந்தோம். அதை அம்மா வெட்டினார்கள்.
வழக்கமாக எங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு மட்டுமே பிறந்த நாள் கொண்டாடுவது உண்டு. ஆனால், பெரியவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் என்று சொல்வதோடு நிறுத்திக்கொள்கிறோம். அதை ஒரு விழாவாக எடுப்பதில்லை. அந்த வகையில் இந்த 60 ஆண்டுகளில் இதுதான் எங்கள் அம்மா கொண்டாடிய முதல் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவுக்கு அடுத்த நாள் (25.6.2006), அம்மாவை அழைத்து ஏதாவது அனுபவங்களைப் பேசுமாறும் பாடுமாறும் கேட்டேன். முதலில் சுய அறிமுகம் செய்துகொண்டு, பிறகு பாடச் சொன்னேன். அவர், ஒரு சுலோகம் பாடினார். ஆயினும் பாதியிலேயே அந்தப் பதிவு நின்றுவிட்டது. தற்சமயம் கைவசம் இருப்பது, இரு நிமிடத்திற்கும் குறைவான ஒலிப்பதிவுதான்.
அதை இந்தத் தளத்தில் இட்டு வைத்துள்ளேன். பதிவிறக்கிக் கேட்டுப் பாருங்கள்.
Saturday, November 25, 2006
Monday, November 13, 2006
இந்த மொழிபெயர்ப்பு சரியா?
சென்னை கடற்கரை தொடர்வண்டி நிலையத்தில் நான் கண்ட அறிவிப்பு இது. 'Running staff rest room' என்பதற்கு 'ஓடும் தொழிலாளர் ஓய்வறை' என்ற மொழிபெயர்ப்பைப் பார்த்த உடனே கவர்ந்தது. மோனை அழகே முதல் காரணம்.
ஆயினும் சற்றே யோசித்ததில் இந்த மொழிபெயர்ப்பு சரியா என்ற கேள்வி எழுந்தது.
முதலில் பின்னிருந்து வருவோம். rest room என்பதை ஓய்வறை என்று சொல்வது சரிதான்.
அடுத்து, staff என்பதற்குத் தொழிலாளர் என்பதைவிட ஊழியர் என்ற சொல் சரியெனத் தோன்றியது.
அடுத்து, Running என்பதை நேரடியாக மொழிபெயர்த்தது, பொருத்தமின்றித் தெரிந்தது. தொடர்வண்டியில் செல்லும் ஓட்டுநர், பரிசோதகர் உள்ளிட்டோர் ஓய்வெடுப்பதற்கான அறை என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதற்குப் பதிலாக, விரையும், இயங்கும், பயணிக்கும் ஆகியவற்றில் ஒன்றினைப் பயன்படுத்தலாமா?
மோனை அழகு வேண்டுமானால், 'இயங்கும் ஊழியர் இளைப்பாறும் அறை', 'உலாவும் ஊழியர் ஓய்வறை', 'தடம்மேவு ஊழியர் தங்குமிடம்' என்றுகூட அழைக்கலாம்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
Saturday, November 11, 2006
அமரர் வல்லிக்கண்ணன் இறுதிக் காட்சிகள்
இலக்கிய ஞானி, சிற்றிதழ்களின் செவிலித் தாய் எனப் பலவாறாகப் புகழப்பெற்றவரும் சாகித்திய அகாதெமி விருது பெற்றவருமான முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன், 2006 நவ.9 அன்று இரவு 9.25 மணிக்குச் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86.
நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வல்லிக்கண்ணன், அக்.29 அன்று சென்னை கல்யாணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் நான்கு நாள்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், பிறகு உடல்தேறி சாதாரண சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். ஆயினும் இந்தக் காய்ச்சலுக்காக அதிக வீரியம் உள்ள மருந்துகளை உட்கொண்டதை அவர் உடல் தாங்காததால் நவ.10 அன்று மறைந்துவிட்டார்.
இறப்பதற்கு ஒரு நாள் முன்பு வரை நல்ல நினைவில் இருந்த அவர், கடைசி நாளில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருடைய உடல், நவ.10 அன்று பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை பெசன்ட் நகர் மயானக் கூடத்தில் தகனம் செய்யப்பட்டது.
நவ.10 அன்று காலை நான், சென்னை ராயப்பேட்டை வள்ளலார் குடியிருப்பில் உள்ள அவர் இல்லத்திற்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினேன். நான் சென்ற நேரத்தில் வண்ண நிலவன், இளையபாரதி, தோழர் நல்லகண்ணு, தோழர் மகேந்திரன் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதிலும் நல்ல படைப்புகளைப் பாராட்டுவதிலும் புதிய சிற்றிதழ்களை வளர்ப்பதிலும் அவர் கடைசிக் காலம் வரை ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார். யாரையும் காயப்படுத்தாத மென்மையான குரலில் நல்ல கருத்துகளையே எப்போதும் பேசினார். சுமாரான படைப்புகளையும் தன் நல்ல சொற்களால் நல்ல படைப்பினை நோக்கி ஆற்றுப்படுத்தியவர் அவர்.
1996இல் என் முதல் நூலான பூபாளம் கவிதைத் தொகுப்பிற்கு அவரிடம் ஆய்வுரை தருமாறு கேட்டேன். உடனே ஒப்புக்கொண்டு முத்து முத்தான கையெழுத்தில் எழுதி அளித்தார். அதன் பிறகும் பல முறைகள் எனக்குக் கடிதம் எழுதி ஊக்குவித்தார். அமுதசுரபிக்கு ஆசிரிராகப் பொறுப்பேற்றுத் தயாரித்த முதல் இதழை அவருக்கு அனுப்பினேன். உடனே பாராட்டு மடல் எழுதினார். அவருடன் பேசிய தருணங்களில் அவருக்கும் எனக்கும் 56 ஆண்டுகள் இடைவெளி உள்ளது என்பதை நான் உணர்ந்ததில்லை. அன்பும் தோழமையும் கனிவும் மிக்க ஓர் இனிய நண்பரை இழந்தது, மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் என்ற நூலுக்காகச் சாகித்திய அகாதெமி விருதினைப் பெற்ற இவர், ஏராளமான கட்டுரைகளும் சிறுகதைகளும் புதினங்களும் கவிதைகளும் எழுதியவர். எல்லோருக்கும் இனியவரான வல்லிக்கண்ணனின் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாசகர்கள், தங்கள் இரங்கல் செய்திகளை tamileditor@sify.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். அதனைச் சிஃபி தளத்தில் வெளியிடுவோம். நேரடியாக வல்லிக்கண்ணன் குடும்பத்தினருக்கே தெரியப்படுத்த விரும்புவோர், gganesan@intecc.com, ganesanpillai@yahoo.com ஆகிய முகவரிகளுக்குத் தெரிவிக்கலாம். இந்தக் கணேசன், வல்லிக்கண்ணனின் அண்ணன் கோமதிநாயகத்தின் மகனாவார். கீழே உள்ளது, அமரர் கோமதிநாயகத்தின் புகைப்படம்.
சென்னை இராயப்பேட்டையில் உள்ள இந்த இல்லத்தில் வல்லிக்கண்ணன் தன் வாழ்நாளின் கடைசி 20 ஆண்டுகளைக் கழித்தார். அங்குள்ள அவரது அறையிலிருந்து ஏராளமான பக்கங்களை எழுதியுள்ளார். அவருடைய நினைவுகளைத் தக்க வைப்பதற்காக அவர் தொடர்பாக அங்கு இருந்த சிலவற்றைப் படம் பிடித்தேன்.
வல்லிக்கண்ணனின் சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன் என்ற நூலின் முகப்பு அட்டை.
வல்லிக்கண்ணனின் சிறியன சிந்தியாதான் வல்லிக்கண்ணன் என்ற நூலின் பின் அட்டை.
வல்லிக்கண்ணன் பெற்ற விருதுகள் சில.
வல்லிக்கண்ணன் பெற்ற அக்ஷர விருது
வல்லிக்கண்ணனின் ஓவியம் ஒன்று.
வல்லிக்கண்ணன் மறைவுச் செய்தியை வானொலிக்குத் தெரிவிக்கும் கடிதம்.
வல்லிக்கண்ணன் பயன்படுத்திய மேசை
வல்லிக்கண்ணன் பயன்படுத்திய மேசை
வல்லிக்கண்ணன் பயன்படுத்திய நாற்காலி
வல்லிக்கண்ணனின் புத்தக அடுக்கு
வல்லிக்கண்ணனின் புத்தக அடுக்கு
வல்லிக்கண்ணனின் புத்தக அடுக்கு
வல்லிக்கண்ணனைக் கடைசி வரை நன்கு கவனித்துக்கொண்ட அவரின் அண்ணி மகமாயி அம்மாள்.
வல்லிக்கண்ணனுக்கு அஞ்சலி செலுத்த வந்த வண்ணநிலவன். இவருக்கு வண்ணநிலவன் என்று பெயர் சூட்டியவர், வல்லிக்கண்ணன்.
வல்லிக்கண்ணனுக்கு அஞ்சலி செலுத்த வந்த இளையபாரதி.
வ.க. வீடு, முதல் மாடியில் உள்ளது. வல்லிக்கண்ணனுக்கு அஞ்சலி செலுத்த வருவோர் அமர்வதற்காகத் தரைத் தளத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகள். நான் சென்றபோது இதில் ஒருவர்கூட இல்லை. பிறகு வந்த வண்ணநிலவனும் இளையபாரதியும் என்னுடன் சேர்ந்து இங்கு சிறிது நேரம் அமர்ந்தார்கள்.
தரைத் தளத்து நாற்காலிகள்.
வல்லிக்கண்ணனுக்காகச் சுடர்விட்ட குத்துவிளக்கு.
=====================================================
தொடர்புடைய சுட்டிகள் சில:
வல்லிக்கண்ணன் மறைவு தொடர்பான தமிழ்சிஃபி செய்தி
வல்லிக்கண்ணனின் பெரும் துயரம் சிறுகதை. அமுதசுரபி தீபாவளி மலருக்காக அவரிடமிருந்து நான் கேட்டு வாங்கி வெளியிட்ட கதை இது. இதைக் கேட்பதற்கு ஒரு மாதம் முன்பு, ஒரு கூட்டத்தில் பேசிய வ.க., தன்னைப் படைப்பாளி என்பதைப் பலரும் மறந்து ஆய்வாளர் ஆக்கிவிட்டார்கள் என்று பெசினார். நான் அந்தக் கூட்டத்தில் இருந்தேன். அதை நினைவுபடுத்தி, இந்த முறை, சிறுகதை அனுப்புங்கள் என்று கேட்டேன். அதற்கு அனுப்பிய கதை இது.
வல்லிக்கண்ணன் பற்றி வண்ணநிலவன் 1
வல்லிக்கண்ணன் பற்றி வண்ணநிலவன் 2
Wednesday, November 08, 2006
தெருநாய்களின் வாழ்வியல்
படுத்துறங்கும் நாய்க்குட்டி:
சென்னை அம்பத்தூரில் எங்கள் வீட்டருகே இந்த நாய்க்குட்டிகளைக் கண்டேன். இரண்டும் ஒன்றை ஒன்று விரட்டிப் பிடித்து, கடித்து விளையாடிக்கொண்டிருந்தன. பிறகு ஓய்வெடுக்க ஒன்றின் மீது ஒன்று ஏறி அமைதியாகப் படுத்துவிட்டன. இத்தனைக்கும் இது ஒதுக்குப்புறமான இடம் இல்லை. பேருந்துகள் செல்லும் தார்ச்சாலைக்கு மிக அருகில். என்ன துணிச்சல் பார்த்தீர்களா?
பால்குடிக்கும் நாய்க்குட்டி:
சென்னை அம்பத்தூரில் எங்கள் வீட்டருகே நாய்கள் ஏராளம். பணிமுடிந்து இரவு 10, 11 மணிக்குக்கூட நான் திரும்புவதுண்டு. அப்போதெல்லாம் இந்த நாய்கள் குலைப்பதுண்டு. அதிலிருந்து நாய்களின் உளவியலைக் கொஞ்சம் அறிய முடிந்தது.
நாய்களைத் தொடர்ந்து கண்டு வந்ததன் விளைவாக எனக்குள் சில முடிவுகளும் கேள்விகளும் பிறந்துள்ளன. அவை வருமாறு:
மிதிவண்டியில் வந்தால் நாய்கள் குலைக்கின்றன. அதே நேரம் இருசக்கர வாகனத்தில் வந்தால் அவை விரைந்து ஒதுங்கி எனக்கு வழி விடுகின்றன. நாய்கள், பெரிய, வேகமான வாகனங்களைக் கண்டால் அஞ்சுகின்றன.
நாய்களுக்குள் தகவல் தொடர்புச் சங்கிலிப் பின்னல் சிறப்பாக உள்ளது. ஒரு நாய் குலைத்தால் பல நாய்கள் அதற்குத் துணைக்கு வருகின்றன.
ஒவ்வொரு நாயும் தனக்கென்று ஓர் எல்லையை வைத்துள்ளது. எவ்வளவுதான் வேகமாக ஒருவரைத் துரத்தி வந்தாலும் தெரு முனைக்கு வந்ததும் நாய்கள் திரும்பிச் சென்று விடுகின்றன. அத்துடன் தன் எல்லை முடிந்துவிட்டது என்று நினைக்கிறது போலும்.
ஒரு பெண் நாயைப் பல ஆண் நாய்கள் மோப்பம் பிடிக்கின்றன. இதனால் நாய்களுக்குப் பால்வினை நோய் எதுவும் வராதா? நாய்களுக்குள் ஆண்களைவிடப் பெண்களின் விகிதம் குறைவாக இருக்கிறதா?
கோபத்தைப் பற்களைக் காட்டியும் உரக்கக் குறைத்தும் வெளிப்படுத்தும் நாய், தாபத்தைப் பெண் நாய்களின் பின்புறத்தை மோப்பம் பிடிப்பதன் மூலம் வெளிப்படுத்துகிறது.
தெருநாய்கள் மழையில் நனைந்தால் ஒழிய, பெரும்பாலும் குளிப்பதில்லை.
கெட்டுப் போன அல்லது சுவையில்லாத உணவை நாய்கள் சீந்துவதில்லை. ஆனால், மலத்தை உண்ணுகின்றன.
மணலைக் கால்களால் தோண்டிக் குழி ஏற்படுத்தி அதில் நாய்கள் படுக்கின்றன.
இரவில் சாலை முழுதும் காலியாக இருந்தாலும் நாய்கள், சாலையின் நடுப்பகுதியிலேயே பெரும்பாலும் படுக்கின்றன.
நாய்க்கு வீடு என்று இல்லையே தவிர, அது நாடோ டி இல்லை. ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இடத்திலேதான் தொடர்ந்து படுக்கின்றன.
கீழே குனிந்து கல்லை எடுப்பது போல் பாவனை செய்தாலே நாய் பயந்து வெகு தூரம் ஓடிவிடுகிறது. பிறகு நம் கையில் எதுவும் இல்லை என்று தெரிந்தால் மீண்டும் அருகில் வந்து குரைக்கிறது. நம் கையில் அதற்கு எதிரான ஆயுதம் இருக்கிறது என்று அது உணர்ந்தால் சற்று தள்ளி நின்று எச்சரிக்கையாகக் குரைக்கிறது. அடிப்படையிலேயே எல்லா நாய்களும் அடிப்பது போன்ற சைகைக்கு அஞ்சுகின்றன.
நாய் அறிதுயில் நிலையில்தான் உறங்குகின்றன. அது, ஆழமாக உறங்குகிறதா என்பது ஐயமே.
புதிய நாய், தன் எல்லைக்குள் வந்தால் அந்தத் தெருவின் நாய்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதை விரட்டி அடிக்கின்றன.
இன்னும் நிறைய உண்டு. பிற பின்.
சென்னை அம்பத்தூரில் எங்கள் வீட்டருகே இந்த நாய்க்குட்டிகளைக் கண்டேன். இரண்டும் ஒன்றை ஒன்று விரட்டிப் பிடித்து, கடித்து விளையாடிக்கொண்டிருந்தன. பிறகு ஓய்வெடுக்க ஒன்றின் மீது ஒன்று ஏறி அமைதியாகப் படுத்துவிட்டன. இத்தனைக்கும் இது ஒதுக்குப்புறமான இடம் இல்லை. பேருந்துகள் செல்லும் தார்ச்சாலைக்கு மிக அருகில். என்ன துணிச்சல் பார்த்தீர்களா?
பால்குடிக்கும் நாய்க்குட்டி:
சென்னை அம்பத்தூரில் எங்கள் வீட்டருகே நாய்கள் ஏராளம். பணிமுடிந்து இரவு 10, 11 மணிக்குக்கூட நான் திரும்புவதுண்டு. அப்போதெல்லாம் இந்த நாய்கள் குலைப்பதுண்டு. அதிலிருந்து நாய்களின் உளவியலைக் கொஞ்சம் அறிய முடிந்தது.
நாய்களைத் தொடர்ந்து கண்டு வந்ததன் விளைவாக எனக்குள் சில முடிவுகளும் கேள்விகளும் பிறந்துள்ளன. அவை வருமாறு:
மிதிவண்டியில் வந்தால் நாய்கள் குலைக்கின்றன. அதே நேரம் இருசக்கர வாகனத்தில் வந்தால் அவை விரைந்து ஒதுங்கி எனக்கு வழி விடுகின்றன. நாய்கள், பெரிய, வேகமான வாகனங்களைக் கண்டால் அஞ்சுகின்றன.
நாய்களுக்குள் தகவல் தொடர்புச் சங்கிலிப் பின்னல் சிறப்பாக உள்ளது. ஒரு நாய் குலைத்தால் பல நாய்கள் அதற்குத் துணைக்கு வருகின்றன.
ஒவ்வொரு நாயும் தனக்கென்று ஓர் எல்லையை வைத்துள்ளது. எவ்வளவுதான் வேகமாக ஒருவரைத் துரத்தி வந்தாலும் தெரு முனைக்கு வந்ததும் நாய்கள் திரும்பிச் சென்று விடுகின்றன. அத்துடன் தன் எல்லை முடிந்துவிட்டது என்று நினைக்கிறது போலும்.
ஒரு பெண் நாயைப் பல ஆண் நாய்கள் மோப்பம் பிடிக்கின்றன. இதனால் நாய்களுக்குப் பால்வினை நோய் எதுவும் வராதா? நாய்களுக்குள் ஆண்களைவிடப் பெண்களின் விகிதம் குறைவாக இருக்கிறதா?
கோபத்தைப் பற்களைக் காட்டியும் உரக்கக் குறைத்தும் வெளிப்படுத்தும் நாய், தாபத்தைப் பெண் நாய்களின் பின்புறத்தை மோப்பம் பிடிப்பதன் மூலம் வெளிப்படுத்துகிறது.
தெருநாய்கள் மழையில் நனைந்தால் ஒழிய, பெரும்பாலும் குளிப்பதில்லை.
கெட்டுப் போன அல்லது சுவையில்லாத உணவை நாய்கள் சீந்துவதில்லை. ஆனால், மலத்தை உண்ணுகின்றன.
மணலைக் கால்களால் தோண்டிக் குழி ஏற்படுத்தி அதில் நாய்கள் படுக்கின்றன.
இரவில் சாலை முழுதும் காலியாக இருந்தாலும் நாய்கள், சாலையின் நடுப்பகுதியிலேயே பெரும்பாலும் படுக்கின்றன.
நாய்க்கு வீடு என்று இல்லையே தவிர, அது நாடோ டி இல்லை. ஒவ்வொன்றும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இடத்திலேதான் தொடர்ந்து படுக்கின்றன.
கீழே குனிந்து கல்லை எடுப்பது போல் பாவனை செய்தாலே நாய் பயந்து வெகு தூரம் ஓடிவிடுகிறது. பிறகு நம் கையில் எதுவும் இல்லை என்று தெரிந்தால் மீண்டும் அருகில் வந்து குரைக்கிறது. நம் கையில் அதற்கு எதிரான ஆயுதம் இருக்கிறது என்று அது உணர்ந்தால் சற்று தள்ளி நின்று எச்சரிக்கையாகக் குரைக்கிறது. அடிப்படையிலேயே எல்லா நாய்களும் அடிப்பது போன்ற சைகைக்கு அஞ்சுகின்றன.
நாய் அறிதுயில் நிலையில்தான் உறங்குகின்றன. அது, ஆழமாக உறங்குகிறதா என்பது ஐயமே.
புதிய நாய், தன் எல்லைக்குள் வந்தால் அந்தத் தெருவின் நாய்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அதை விரட்டி அடிக்கின்றன.
இன்னும் நிறைய உண்டு. பிற பின்.
Sunday, October 01, 2006
வியப்பூட்டும் விஸ்வேஸ்வரய்யா அருங்காட்சியகம்
அண்மையில் பெங்களூர் சென்ற போது அங்கிருக்கும் விஸ்வேஸ்வரய்யா தொழில், நுட்ப அருங்காட்சியகத்தைக் காணும் வாய்ப்புப் பெற்றேன். வாயிலிலேயே குட்டி விமானம் வரவேற்றது. நான்கைந்து மாடிகளில் துறை வாரியாகப் பிரித்துப் பல்வேறு கருவிகளையும் அவற்றின் செய்முறையையும் விளக்கியிருந்தார்கள்.
அறிவியல் மேதைகளின் உருவப் படங்கள்
நோபல் பரிசு பெற்ற அறிவியல் மேதைகளின் உருவப் படங்கள், கட்டடத்தின் மையத்தில் வட்டமாக வைக்கப்பட்டிருந்தன. அங்கு பல்வேறு அறிவியல் தத்துவங்களின் அடிப்படையில் இயங்கும் பிரமாண்ட கருவிகள், இருந்தன. அவற்றை நாமே நேரடியாக இயக்கி, செயல்படும் விதத்தை அறிய முடிந்தது. சிறுவர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஒரு பந்தினை ஓரிடத்தில் தட்டிவிட்டால் அது எங்கெங்கு எல்லாம் போகிறது என்பதை விளையாட்டாக அமைத்திருந்தார்கள். இதே போன்ற நுட்பத்தைக் கொண்டே அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளக் கமல், ஒருவரைக் கொன்றது நினைவிற்கு வந்தது.
மரபணுவின் மாதிரித் தோற்றம்
இந்த அருங்காட்சியத்தில் ஐந்து பெரும் பகுதிகள், மிகவும் புகழ் பெற்றவை. அவை: எஞ்சின் அரங்கம், மின்னணு நுட்ப அரங்கம், புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளின் அரங்கம், சிறுவர்களுக்கான அறிவியல் அரங்கம், அச்சுக் கருவிகளின் அரங்கம்.
அந்தக் காலத் தொலைபேசி
ரைட் சகோதர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தது எப்படி, அந்த விமானம் எப்படி இருந்தது, எப்படி இயங்கியது, ஹெலிகாப்டர் இயங்குவது எவ்விதம், ஏவுகணை, செயற்கைக் கோள் ஆகியவற்றின் மாதிரிகள், காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி, புனல் மின்சார உற்பத்தி, மேலும் இயந்திரவியல், விண்ணியல், உயிரி நுட்பியல், மின்னணுப் பொருட்கள், மோட்டார் மூலம் இயங்குபவை, உலோகக் கருவிகள், மரக் கருவிகள் ஆகியவற்றின் செயல்பாடுகள்.... என அறிவியலின் அனைத்துத் துறைகளையும் எளிய வகையில் அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.
பொருட்களைக் காட்டுவதுடன் ஆர்வம் உள்ளவர்கள், அதை இயக்கிப் பார்க்கும் வாய்ப்பையும் இந்த அருங்காட்சியகம் தருகிறது. இது, மாணவர்களுக்கு மிகப் பெரும் பயனை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
இரண்டாம் தலைமுறைக் கணினி
அந்தக் காலத்தில் கணினி, நகல் கருவி (ஜெராக்ஸ்), தொலைபேசி உள்ளிட்ட பலவும் எப்படி இருந்தன என்பதை நேரடியாக அறிய முடிகிறது. அதே போல் தொலைதூரத் தொலைபேசி அழைப்புகள் எப்படி இணைக்கப்படுகின்றன என்பதையும் செய்முறை மூலம் காட்டியிருந்தார்கள். பெரும்பாலான இடங்களில் ஆங்கிலத்தில் விளக்கக் குறிப்பு இருந்தது வசதியாக இருந்தது.
குறிப்பிட்ட நேரங்களில் அறிவியல் விளக்கங்களைத் திரையில் ஒளி-ஒலிக் காட்சியாகவும் காட்டுகிறார்கள். ஒவ்வொரு மாடியாக ஏறி, ஒவ்வொரு கண்டுபிடிப்பைப் பற்றியும் நுட்பத்தைக் குறித்தும் ஆழமாக அறிய ஆவல்தான். ஆனால், நேரமின்மை காரணமாக அவசர அவசரமாகப் பார்த்துவிட்டுத் திரும்பினேன்.
அந்தக் கால நகல் கருவி
இது, நவீன கர்நாடகச் சிற்பியான விஸ்வேஸ்வரய்யா நினைவாக அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரின் பிரதான பகுதியில் கஸ்தூரிபா சாலையில் அமைந்துள்ளது. சிறிதளவு நுழைவுக் கட்டணம் உண்டு. சிறுவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணமே.
அனைவருமே இந்த அருங்காட்சியகத்திற்கு ஒரு முறையேனும் சென்று பார்ப்பது நம் அறிவினை இன்னும் விசாலமாக்கும்; மாணவர்கள் இங்கு உறுதியாகச் செல்லவேண்டும். எந்தப் பாடப் புத்தகமும் இவ்வளவு அழகாக, எளிமையாக, ஆழமாகச் சொல்லித் தர முடியாது.
அறிவியல் மேதைகளின் உருவப் படங்கள்
நோபல் பரிசு பெற்ற அறிவியல் மேதைகளின் உருவப் படங்கள், கட்டடத்தின் மையத்தில் வட்டமாக வைக்கப்பட்டிருந்தன. அங்கு பல்வேறு அறிவியல் தத்துவங்களின் அடிப்படையில் இயங்கும் பிரமாண்ட கருவிகள், இருந்தன. அவற்றை நாமே நேரடியாக இயக்கி, செயல்படும் விதத்தை அறிய முடிந்தது. சிறுவர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஒரு பந்தினை ஓரிடத்தில் தட்டிவிட்டால் அது எங்கெங்கு எல்லாம் போகிறது என்பதை விளையாட்டாக அமைத்திருந்தார்கள். இதே போன்ற நுட்பத்தைக் கொண்டே அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ளக் கமல், ஒருவரைக் கொன்றது நினைவிற்கு வந்தது.
மரபணுவின் மாதிரித் தோற்றம்
இந்த அருங்காட்சியத்தில் ஐந்து பெரும் பகுதிகள், மிகவும் புகழ் பெற்றவை. அவை: எஞ்சின் அரங்கம், மின்னணு நுட்ப அரங்கம், புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளின் அரங்கம், சிறுவர்களுக்கான அறிவியல் அரங்கம், அச்சுக் கருவிகளின் அரங்கம்.
அந்தக் காலத் தொலைபேசி
ரைட் சகோதர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தது எப்படி, அந்த விமானம் எப்படி இருந்தது, எப்படி இயங்கியது, ஹெலிகாப்டர் இயங்குவது எவ்விதம், ஏவுகணை, செயற்கைக் கோள் ஆகியவற்றின் மாதிரிகள், காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி, புனல் மின்சார உற்பத்தி, மேலும் இயந்திரவியல், விண்ணியல், உயிரி நுட்பியல், மின்னணுப் பொருட்கள், மோட்டார் மூலம் இயங்குபவை, உலோகக் கருவிகள், மரக் கருவிகள் ஆகியவற்றின் செயல்பாடுகள்.... என அறிவியலின் அனைத்துத் துறைகளையும் எளிய வகையில் அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.
பொருட்களைக் காட்டுவதுடன் ஆர்வம் உள்ளவர்கள், அதை இயக்கிப் பார்க்கும் வாய்ப்பையும் இந்த அருங்காட்சியகம் தருகிறது. இது, மாணவர்களுக்கு மிகப் பெரும் பயனை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
இரண்டாம் தலைமுறைக் கணினி
அந்தக் காலத்தில் கணினி, நகல் கருவி (ஜெராக்ஸ்), தொலைபேசி உள்ளிட்ட பலவும் எப்படி இருந்தன என்பதை நேரடியாக அறிய முடிகிறது. அதே போல் தொலைதூரத் தொலைபேசி அழைப்புகள் எப்படி இணைக்கப்படுகின்றன என்பதையும் செய்முறை மூலம் காட்டியிருந்தார்கள். பெரும்பாலான இடங்களில் ஆங்கிலத்தில் விளக்கக் குறிப்பு இருந்தது வசதியாக இருந்தது.
குறிப்பிட்ட நேரங்களில் அறிவியல் விளக்கங்களைத் திரையில் ஒளி-ஒலிக் காட்சியாகவும் காட்டுகிறார்கள். ஒவ்வொரு மாடியாக ஏறி, ஒவ்வொரு கண்டுபிடிப்பைப் பற்றியும் நுட்பத்தைக் குறித்தும் ஆழமாக அறிய ஆவல்தான். ஆனால், நேரமின்மை காரணமாக அவசர அவசரமாகப் பார்த்துவிட்டுத் திரும்பினேன்.
அந்தக் கால நகல் கருவி
இது, நவீன கர்நாடகச் சிற்பியான விஸ்வேஸ்வரய்யா நினைவாக அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரின் பிரதான பகுதியில் கஸ்தூரிபா சாலையில் அமைந்துள்ளது. சிறிதளவு நுழைவுக் கட்டணம் உண்டு. சிறுவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணமே.
அனைவருமே இந்த அருங்காட்சியகத்திற்கு ஒரு முறையேனும் சென்று பார்ப்பது நம் அறிவினை இன்னும் விசாலமாக்கும்; மாணவர்கள் இங்கு உறுதியாகச் செல்லவேண்டும். எந்தப் பாடப் புத்தகமும் இவ்வளவு அழகாக, எளிமையாக, ஆழமாகச் சொல்லித் தர முடியாது.
Monday, September 18, 2006
மின்னோவியத் திருமேனிகள்
செப்டம்பர் 16 அன்று சென்னை வீதிகளில் இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தேன். வழியெங்கும் மின்னோவியத் திருமேனிகள். விதவிதமான கடவுளர் உருவங்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேற்கு மாம்பலத்திலும் அசோக் நகரிலும் இவை மிக அதிகமாக இருந்தன.
பல மின்னோவியங்களின் கீழ் அவற்றுக்கு நிதியளித்தவரின் பெயரும் மின்னிக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் அரச மரம் ஒன்றுக்கு மின்சார ஆடை உடுத்தியிருந்தார்கள். இந்த மின்னோவியங்களை உருவாக்கிய கலைஞர்கள், பாராட்டுக்கு உரியவர்கள்.
ஆனால், பொது இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள இவற்றுக்கு மின்சாரம் முறைப்படி அனுமதி பெற்றுத்தான் எடுக்கப்பட்டுள்ளதா என்பது என் ஐயப்பாடு. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
பல மின்னோவியங்களின் கீழ் அவற்றுக்கு நிதியளித்தவரின் பெயரும் மின்னிக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் அரச மரம் ஒன்றுக்கு மின்சார ஆடை உடுத்தியிருந்தார்கள். இந்த மின்னோவியங்களை உருவாக்கிய கலைஞர்கள், பாராட்டுக்கு உரியவர்கள்.
ஆனால், பொது இடங்களில் நிறுத்தப்பட்டுள்ள இவற்றுக்கு மின்சாரம் முறைப்படி அனுமதி பெற்றுத்தான் எடுக்கப்பட்டுள்ளதா என்பது என் ஐயப்பாடு. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
Subscribe to:
Posts (Atom)