ஒரிசாவில் கோனாரக் சூரிய கோயிலிலிருந்து சில மணி நேரங்கள் பயண தூரத்தில் இந்தப் புத்தர் திருக்கோயில் உள்ளது. இதில் புதுமை என்னவென்றால், இந்தக் கோயிலை ஒட்டியவாறு பின்புறத்தில் சிவன் கோயில் ஒன்றும் உள்ளது.
முதலில் புத்தர் ஆலயத்தைப் பாருங்கள்:
இந்தக் கோயிலின் முகப்பில் என் பெற்றோரும் அத்தையும் சித்தியும் நிற்கிறார்கள்
புத்தர் சிலை முன் நான்
புத்தர் கோயிலின் பின்புறத்தில் என் அப்பா
இப்போது சிவன் கோயிலைப் பாருங்கள்:
இது, பின்புறத் தோற்றம்
இது, முன்புறத் தோற்றம்
சிவன் கோயிலின் வாசலில் ஒருவர் கூவிக் கூவி பூக்களை விற்றுக்கொண்டிருந்தார்
இவற்றில் நான் இருக்கும் படங்களை மட்டும் என் அப்பா எடுத்தார். இதர படங்களை நான் எடுத்தேன். நாங்கள் இங்கு சென்றபோது உச்சி வெயில் கொளுத்தியது. கோயிலின் தரைப் பகுதியும் படிக்கட்டுகளும் பளிங்குக் கற்களில் அமைந்திருந்தன; அதனால் வெயிலில் தணலெனத் தகித்தன. ஓட்டமாய் ஓடிப் போய்ச் சுற்றிப் பார்த்துத் திரும்பினோம்.
Sunday, July 29, 2007
Saturday, July 28, 2007
கோனாரக் சூரிய கோயிலில் - 4
சிற்பக் கலையின் உன்னதத்தைப் பறைசாற்றும் ஒரிசாவின் கோனாரக் சூரிய கோயிலில் நான் எடுத்த படங்களுள் மேலும் சிலவற்றைக் கண்டு களியுங்கள்.
இந்தத் தேர்ச் சக்கரத்தின் ஒவ்வொரு புள்ளிக்கும் ஒரு பொருள் இருக்கிறது. ஆரத்தில் உள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒவ்வொரு நிமிடத்தைக் குறிக்கின்றது. எனவே இந்தச் சக்கரத்தின் நிழலைக் கொண்டு மணி எவ்வளவு எனத் துல்லியமாகக் கூற முடியும் என்று எங்கள் வழிகாட்டி கூறினார்.
கல்லில் வடிக்கப்பட்ட கிளைகளுடன் கூடிய மரங்கள்
இந்தத் தேர்ச் சக்கரத்தின் ஒவ்வொரு புள்ளிக்கும் ஒரு பொருள் இருக்கிறது. ஆரத்தில் உள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒவ்வொரு நிமிடத்தைக் குறிக்கின்றது. எனவே இந்தச் சக்கரத்தின் நிழலைக் கொண்டு மணி எவ்வளவு எனத் துல்லியமாகக் கூற முடியும் என்று எங்கள் வழிகாட்டி கூறினார்.
கல்லில் வடிக்கப்பட்ட கிளைகளுடன் கூடிய மரங்கள்
Sunday, July 01, 2007
கோனாரக் சூரிய கோயிலில் - 3
சிற்பக் கலையின் உன்னதத்தைப் பறைசாற்றும் ஒரிசாவின் கோனாரக் சூரிய கோயிலில் நான் எடுத்த படங்கள் சிலவற்றைக் கண்டு களியுங்கள்.
அந்நியப் படையெடுப்புகளின் போது இப்படிப் பல சிற்பங்கள் சிதைவுற்றன என்று எங்கள் வழிகாட்டி கூறினார்.
நான் இருக்கும் படத்தை மட்டும் என் அம்மா சவுந்திரவல்லி எடுத்தார்.
அந்நியப் படையெடுப்புகளின் போது இப்படிப் பல சிற்பங்கள் சிதைவுற்றன என்று எங்கள் வழிகாட்டி கூறினார்.
நான் இருக்கும் படத்தை மட்டும் என் அம்மா சவுந்திரவல்லி எடுத்தார்.
என் நூறாவது பதிவு
அண்ணாகண்ணன் புகைப்படங்கள் என்ற இந்த வலைப்பதிவில் மட்டும் என் நூறாவது பதிவு, இது.
அண்ணாகண்ணன் வெளி என்ற வலைப்பதிவில் 97 பதிவுகளும் அண்ணாகண்ணன் கவிதைகள் என்ற பதிவில் 60 பதிவுகளும் அண்ணாகண்ணன் நேர்காணல்கள் என்ற வலைப்பதிவில் 22 பதிவுகளும் அண்ணாகண்ணன் கட்டுரைகள் என்ற வலைப்பதிவில் 65 பதிவுகளும் பதிந்துள்ளேன். ஒட்டுமொத்தமாக, சுமார் 400 பதிவுகளைப் பதிந்திருந்தாலும் அண்ணாகண்ணன் புகைப்படங்கள் என்ற இந்த வலைப்பதிவில் மட்டும் இந்தப் பதிவின் மூலம் சதம் அடித்துள்ளேன்.
முதலில், அச்சிட்ட படங்களை ஒளி உணரி (Scan) மூலம் கணினிக்குக் கொண்டு வந்து பதிவிட்டேன். பிறகு, புகைப்படக் கருவியுடன் கூடிய செல்பேசி வாங்கிய பிறகு அந்தப் படங்களைக் கொண்டு பதிவிட்டேன். அதன் தகவல் தடம் (Data cable) வேலை செய்யாததால், எடுத்த படங்களை உள்ளிட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல் மாதம் வட இந்திய - நேபாளச் சுற்றுலாவுக்குச் செல்லும் முன் எணினி புகைப்படக் கருவி (Digital Camera) ஒன்றினை வாங்கினேன். அதைக் கொண்டு நிறைய படங்கள் எடுக்க முடிகிறது; சிறப்பாகவும் அமைகிறது.
இந்த நூறாவது பதிவில், ஒரிசாவின் கோனாரக் சூரிய கோயிலில் நான் எடுத்த படங்கள் சிலவற்றைக் கண்டு களியுங்கள்.
என் அம்மா சவுந்திரவல்லியும் அத்தை ஜானகியும்
நான் இருக்கும் படங்களை மட்டும் என் அம்மா சவுந்திரவல்லி எடுத்தார்.
அண்ணாகண்ணன் வெளி என்ற வலைப்பதிவில் 97 பதிவுகளும் அண்ணாகண்ணன் கவிதைகள் என்ற பதிவில் 60 பதிவுகளும் அண்ணாகண்ணன் நேர்காணல்கள் என்ற வலைப்பதிவில் 22 பதிவுகளும் அண்ணாகண்ணன் கட்டுரைகள் என்ற வலைப்பதிவில் 65 பதிவுகளும் பதிந்துள்ளேன். ஒட்டுமொத்தமாக, சுமார் 400 பதிவுகளைப் பதிந்திருந்தாலும் அண்ணாகண்ணன் புகைப்படங்கள் என்ற இந்த வலைப்பதிவில் மட்டும் இந்தப் பதிவின் மூலம் சதம் அடித்துள்ளேன்.
முதலில், அச்சிட்ட படங்களை ஒளி உணரி (Scan) மூலம் கணினிக்குக் கொண்டு வந்து பதிவிட்டேன். பிறகு, புகைப்படக் கருவியுடன் கூடிய செல்பேசி வாங்கிய பிறகு அந்தப் படங்களைக் கொண்டு பதிவிட்டேன். அதன் தகவல் தடம் (Data cable) வேலை செய்யாததால், எடுத்த படங்களை உள்ளிட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல் மாதம் வட இந்திய - நேபாளச் சுற்றுலாவுக்குச் செல்லும் முன் எணினி புகைப்படக் கருவி (Digital Camera) ஒன்றினை வாங்கினேன். அதைக் கொண்டு நிறைய படங்கள் எடுக்க முடிகிறது; சிறப்பாகவும் அமைகிறது.
இந்த நூறாவது பதிவில், ஒரிசாவின் கோனாரக் சூரிய கோயிலில் நான் எடுத்த படங்கள் சிலவற்றைக் கண்டு களியுங்கள்.
என் அம்மா சவுந்திரவல்லியும் அத்தை ஜானகியும்
நான் இருக்கும் படங்களை மட்டும் என் அம்மா சவுந்திரவல்லி எடுத்தார்.
Subscribe to:
Posts (Atom)