Thursday, December 10, 2009

அனிதா பிரதாப்பைச் சந்தித்தேன்


புகழ்மிகு இதழாளரும் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை நேர்கண்டவருமான அனிதா பிரதாப்பை 10.12.2009 அன்று சென்னையில் சந்தித்தேன்.

ஜப்பானில் வசிக்கும் இவர், தற்போது சுதந்திரமான இதழாளராக எழுதி வருகிறார்.

மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களின் இல்லத்தில் அவரை நேர்காண அனிதா பிரதாப் வந்திருந்தார். அவருடன் பழ.நெடுமாறனின் மகள் உமாவும் வந்திருந்தார்.

சச்சி அவர்களின் நண்பர் என்ற முறையில் நான் உடன் இருந்தேன்.
















































நேர்காணல் முடிந்த பிறகு, நாங்கள் நால்வரும் அருகில் இருந்த அசோகா உணவு விடுதியில் மதிய உணவு உண்டோம். இந்தச் சந்திப்பு, சிறப்பாக அமைந்தது.