Sunday, August 26, 2007

டிராம் வண்டியில் பயணித்தேன்

Photo Sharing and Video Hosting at Photobucket

கொல்கத்தாவின் பரபரப்பான சாலைகளுக்கு நடுவே ஆங்காங்கே குறுக்கும் நெடுக்குமாக டிராம் வண்டிகள் ஓடுகின்றன. அவை நகரப் பேருந்துகளைப் போலவே, மிகவும் எளிய முறையில் இயக்கப்படுகின்றன. இதனைச் சாலையில் ஓடும் ரெயில் எனலாம்.

நானும் என் அம்மாவும்

Photo Sharing and Video Hosting at Photobucket

இந்த வண்டியில் செல்வதற்கு மாதாந்தர சீசன் டிக்கெட்டு உண்டாம். வண்டிக்குள் 3 மிகப் பெரிய காற்றாடிகள் உள்ளன.

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

மூன்று காற்றாடிகள்

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

வண்டியை நடத்துநர் நிறுத்த வேண்டுமானால், ஒரு நீண்ட கயிற்றில் இணைக்கப்பட்ட மணியை இழுக்கிறார். ஓசை எழுகிறது. ஓட்டுநர் புரிந்துகொண்டு வண்டியை நிறுத்துகிறார். இன்னும் இந்த டிராம் வண்டியைப் பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி வருகின்றனர்.

டிராம் வண்டியை ஓட்டுநர் இயக்குகிறார்

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

வண்டியின் முன் கிடக்கும் தண்டவாளத்தைப் பார்த்தீர்களா?

Photo Sharing and Video Hosting at Photobucket

சென்னையிலும் ஒரு காலத்தில் டிராம் வண்டிகள் ஓடியுள்ளன. இன்று உலகின் பல பகுதிகளிலும் டிராம் வண்டிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. உலகிலேயே கொல்கத்தாவிலும் ஆஸ்திரேலிய நகரம் ஒன்றிலும்தான் டிராம் வண்டிகள் ஓடுகின்றன எனப் பயணி ஒருவர் சொன்னார். ஒரு பாரம்பரியச் சின்னமாக இந்த ரெயில் இன்னும் ஓடுவது, வங்க மக்களின் எளிய, அழகிய மனநிலையை எடுத்துக் காட்டுகிறது.

Saturday, August 25, 2007

ஹூக்ளி நதியில் படகுப் பயணம்

Photo Sharing and Video Hosting at Photobucket

ஹெளரா பாலம் கட்டப்பட்டுள்ள ஹூக்ளி நதியில் 25.4.2007 அன்று படகுப் பயணம் மேற்கொண்டோம். ஹூக்ளி, அகன்று விரிந்து வேகத்துடன் காட்சி தருகிறது. அதில் பலரும் குளித்து, துணிகள் துவைத்துச் செல்கிறார்கள். சிறுவர்கள் ஓடிவந்து, உயரத்திலிருந்து குதித்துத் துளையம் அடித்து விளையாடுகிறார்கள். இத்தகைய நதியோர மகிழ்ச்சி, பெரும்பாலும் கிராமப்புற, இடைநிலை நகர மக்களுக்கே வாய்க்கிற நிலை மாறி, மாநகரமான கொல்கத்தாவின் எல்லையில் மக்கள் இன்புறுவதைக் கண்டேன். சென்னையின் கூவமும் இப்படி மாறினால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் பிறந்தது.

ஹூக்ளி ஆற்றின் கரையோரம்

Photo Sharing and Video Hosting at Photobucket

சிலர் குளிக்கிறார்கள்

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

இது போன்ற படகு ஒன்றில்தான் நாங்கள் சென்றோம்.

Photo Sharing and Video Hosting at Photobucket

படகில் நானும் என் அம்மாவும்

Photo Sharing and Video Hosting at Photobucket

படகு, கரையில் கட்டப்பட்ட போது படகுக்கும் கரைக்கும் இடையே சலசலத்து ஓடிய நீர்

Photo Sharing and Video Hosting at Photobucket

படகில் என் அம்மா, அப்பா, அத்தைகள்

Photo Sharing and Video Hosting at Photobucket

படகில் நான்

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

ஹெளரா பாலத்தின் மீது நடந்தேன்

ஏப்ரல் 25 அன்று கொல்கத்தாவின் எல்லையில் உள்ள ஹெளராவை அடைந்தோம். தானியில் (ஆட்டோ) போகும் போதே சொன்னார்கள், பாலத்திற்கு அந்தப் பக்கம் இருப்பது கொல்கத்தா; இந்தப் பக்கம் இருப்பது ஹெளரா என்று. இவை இரட்டை நகரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

அருகிலிருந்த வசதிக் குறைவான ஒரு விடுதியில் தங்கினோம். எங்களுக்கு என்று வாய்த்த அறையில் தனிக் கழிவறைகூட இல்லை. பொதுக் கழிவறையிலிருந்து எப்போதும் சிகரெட் நெடி அடித்தது. அதனால் கதவை எப்போதும் மூடியே வைத்தோம். அதனால் காற்றோட்டம் இல்லை. மெத்தை, கட்டில் உள்பட பல வசதிகளும் சரியில்லை. ஜன்னலையும் திறக்க முடியவில்லை. அதை ஒட்டினாற்போல் நிறைய குப்பைகள்! ஒரிசாவின் பூரியில் நாங்கள் இருந்த அறை, எவ்வளவோ தேவலாம் என்ற நிலையை ஏற்படுத்தியது, ஹெளரா அறை.

பயண ஏற்பாட்டாளரைக் கூப்பிட்டுக் கேட்டால், 'வேறு விடுதி கிடைக்கவில்லை; கொஞ்சம் சமாளியுங்கள்; ஹெளராவில் மக்கள் நெரிசல் அதிகம். அறை கிடைப்பதே கடினம்' என்றார். 'இல்லை, வேறு அறை கொடுங்கள்' என்று கேட்டோம். 'பார்க்கிறேன்' என்றவரைப் பிறகு பார்க்க முடியவில்லை.

Photo Sharing and Video Hosting at Photobucket

முதலில் ஹெளரா பாலத்தைப் பார்த்தோம். மிகப் பிரமாண்டமாக, ஒரு பொறியியல் அற்புதமாக அந்தப் பாலம் தொங்கிக்கொண்டிருந்தது.

Photo Sharing and Video Hosting at Photobucket

ஆயிரக்கணக்கான வாகனங்கள் அதன் மீது சென்றுகொண்டிருந்தன. கீழே வேகமான நீரோட்டம்; மேலே விரையும் வாகனங்கள். அவ்வளவு கனத்தையும் தாங்கிக்கொண்டு, இரு கரைகளிலும் நிற்கும் தூண்கள், பாலத்தைத் தூக்கிப் பிடித்திருந்தன.

Photo Sharing and Video Hosting at Photobucket

இரவீந்திர சேது என்று அந்தப் பாலத்திற்குப் பெயர் சூட்டியிருந்தார்கள். வங்காளத் தேசியக் கவியின் பெயரில் பாலம் கம்பீரமாக நின்றிருந்தது. அந்தப் பாலத்தின் மீது நடந்தேன்.

Photo Sharing and Video Hosting at Photobucket

அதன் மீது புகைப்படங்கள் எடுக்கத் தடை என்று கூறியிருந்தார்கள். எனவே அதை ஒட்டிய தெருவில் நின்று சில படங்கள் எடுத்தோம்.

என் அம்மா

Photo Sharing and Video Hosting at Photobucket

என் அப்பா

Photo Sharing and Video Hosting at Photobucket

நான்

Photo Sharing and Video Hosting at Photobucket

இந்தப் பாலத்தைப் பற்றி மேலும் அறியப் பாருங்கள்: http://www.howrahbridgekolkata.nic.in

மேலே கண்டது, பழைய ஹெளரா பாலம்; புதிய பாலம் கீழே உள்ளது.

Photo Sharing and Video Hosting at Photobucket

பிறகு, ஹூக்ளி ஆற்றில் படகுப் பயணம் மேற்கொண்டோம். அது, அடுத்த பதிவில்.

Wednesday, August 22, 2007

சிங்கம், சிறுத்தை... இன்னும் பல

ஒரிசாவின் நந்தன்கனான் விலங்கியல் பூங்காவில் பல வகை உயிரினங்களைப் பார்த்தேன். மான், குரங்கு, யானை, வெள்ளை மயில், வெள்ளைப் புலி ஆகியவற்றை ஏற்கெனவே பார்த்தோம். மேலும் சிலவற்றை இங்கே பாருங்கள்.

உலாத்தும் சிங்கம்

Photo Sharing and Video Hosting at Photobucket

மாமிசம் தின்னுகிறது

Photo Sharing and Video Hosting at Photobucket

ஒரு சிறுத்தை

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

மர நாய்

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

ஒரு கரடி

Photo Sharing and Video Hosting at Photobucket

முதலைகள்

Photo Sharing and Video Hosting at Photobucket

ஆந்தை

Photo Sharing and Video Hosting at Photobucket

சின்பன்சி குரங்கு

Photo Sharing and Video Hosting at Photobucket

நெருப்புக் கோழி

Photo Sharing and Video Hosting at Photobucket

மயில்

Photo Sharing and Video Hosting at Photobucket

Sunday, August 19, 2007

யானையும் நீர் யானையும்

துதிக்கை நீட்டி, காணிக்கையை வாங்கிப் பாகனிடம் கொடுக்கும் ஒயிலான காட்சி இது. ஒரிசாவின் நந்தன்கனான் விலங்கியல் பூங்காவில் எடுத்த படம்.

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

இதே விலங்கியல் பூங்காவில் நீர் யானைகளையும் கண்டேன். அப்போது எடுத்த படங்களைப் பாருங்கள்.

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Saturday, August 18, 2007

ஒரிசாவில் ஒரு குரங்குக் கூட்டம்

Photo Sharing and Video Hosting at Photobucket

ஒரிசாவில் நந்தன் கனான் விலங்கியல் பூங்காவில் ஒரு குரங்குக் கூட்டத்தைக் கண்டேன். அதில் ஒன்று, ஒரு பாட்டியின் கையில் இருந்த நொறுக்குத் தீனியைப் பிடுங்கித் தின்றது.

Photo Sharing and Video Hosting at Photobucket

அதனுடன் மேலும் பல குரங்குகளும் சேர்ந்துகொண்டு உண்டன.

Photo Sharing and Video Hosting at Photobucket

மரக்கிளையில் அமர்ந்திருந்த ஒரு தனிக் குரங்கு

Photo Sharing and Video Hosting at Photobucket

பூரி ஜெகந்நாதர் கோயிலிலும் இதே போன்ற ஒரு பறிப்புச் சம்பவம் நடந்தது. மூதாட்டி ஒருவர் கையில் இருந்த தேங்காய் மூடி, வாழைப் பழத்தை ஒரு குரங்கு திடீரெனப் பிடுங்கியது. அந்த அம்மாவும் அதைக் கொடுத்துவிட்டு, பேசாமல் சென்றுவிட்டார்.

காசியிலும் நிறைய குரங்குகளைப் பார்க்க முடிந்தது.



இந்தக் குரங்குகளை வைத்து நான் எழுதிய கவிதையை வாசிக்க இங்கே செல்லுங்கள் >>>>