Sunday, June 19, 2011

நான் கண்ட காசி

மே 2007இல் பெற்றோர், உறவினர்களுடன் காசிக்குச் சுற்றுலா சென்ற போது எடுத்த படங்கள்:

 கங்கையில் புனிதக் குளியல்

  கங்கையும் கரையும் 1

  கங்கையும் கரையும் 2

கொடி அணிவகுப்பு
விற்பனைக்குக் காத்திருக்கும் தயிரும் மண் கிண்ணங்களும்


 காசியின் குறுகிய சந்துகளில் திரியும் மாடுகளுள் ஒன்று.

கோமாதாவுக்கு பக்தியுடன் ஒரு வணக்கம்

தாயும் சேயும்
 கங்கையின் நீரலைகள்

  மாலை நேரத்து மயக்கம்

 படகில் செல்லும் ஒருவர், கங்கை நீரைப் புட்டியில் பிடிக்கிறார்

 ஒரு பிணம் எரிகிறது! காசியில் இறந்தால் மோட்சம்!

 காசி மாநகரத் துணிக் கடை ஒன்றின் பெயர்ப் பலகையில் தமிழ்

 தலைகீழ் தவம் செய்கிறது படகு

 அப்பப்பா! எவ்வளவு கொடிகள்!

 மே 2007இல் நான் காசிக்குச் சென்ற போது எடுத்த படங்கள் இவை.
படமும் எழுத்தும்: அண்ணாகண்ணன்



என் தந்தை குப்புசாமி

தந்தையர் தினத்தை முன்னிட்டு, என் தந்தை குப்புசாமி அவர்களின் சில படங்களை என் வலைப்பதிவுகளிலிருந்து திரட்டி வெளியிடுகிறேன்.

தமிழாசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்ற அவர், இப்போதும் உற்சாகமாக, சுறுசுறுப்பாக உழைத்து, பலருக்கும் உதவி வருகிறார்.

இந்தத் தந்தையர் நாளில் அவரை வணங்குகிறேன்.

1978இல்

1996இல் என் முதல் நூல் வெளியீட்டு விழாவில்

2001இல் சென்னையில்
2007இல் ஒரிசாச் சுற்றுலா சென்ற போது, உறவினர்களுடன்.

2007இல் நேபாளச் சுற்றுலாவின்போது, பசுபதிநாதர் கோவில் வாசலில்

2007இல் ஒரிசாச் சுற்றுலா சென்ற போது, உறவினர்களுடன்.

புது கேமராவில் பிடித்த காட்சிகள்

ராணி வார இதழில் துணை ஆசிரியராக இருந்தபோது, சில நேரங்களில் வெளியூர்களுக்குச் செல்ல வேண்டி இருந்தது. அப்போதெல்லாம் புகைப்படம் எடுக்கத் தனியாக ஒருவரை அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது. எனவே, எனக்கு ஒரு கேமரா வாங்கிக்கொடுத்து விட்டால் நானே புகைப்படம் எடுத்துவிடலாம் என்று ஆசிரியர் அ.மா.சாமி நினைத்தார். அதற்காகப் புதிதாக ஒரு புகைப்படப் பதிவுக் கருவியை வாங்கினார்கள் (2001). அதில் முதல் முதலாகப் புகைப்படச் சுருள் ஒன்றை இட்டு, பயிற்சிக்காக ஒரு சுருள் (ரோல்) வரைக்கும் எனக்குப் பிடித்ததை எடுத்துப் புகைப்படக் கலை பழகச் சொன்னார்.

அதன் படி 2001 மார்ச் 18 அன்று புறப்பாடு ஆயிற்று. சுமார் 32 படங்களை எடுத்தேன். அவற்றுள் சில இங்கே:

அம்பத்தூர் ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பாலத்திலிருந்து இந்தப் படத்தை எடுத்தேன். அதிகாலையில் கதிரவன் உதயம்.

Photobucket - Video and Image Hosting

வீட்டுக்குத் திரும்பும் வழியில் ஒரு வீட்டு வாசலில் இந்த நாய், உயிரே போவது போல் குரைத்துக்கொண்டிருந்தது. அதன் கண்கள் எப்படிப் பளபளக்கின்றன பார்த்தீர்களா?

Photobucket - Video and Image Hosting

புழல் ஏரியின் ஒரு முனை, எங்கள் வீட்டுக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மணல் கொள்ளையினாலோ என்னவோ அங்கு பல நேரங்களில் தண்ணீர் அதிகம் இருப்பதில்லை. நான் போன அன்று நூற்றுக்கணக்கான காகங்கள் அங்கு மாநாடு போட்டிருந்தன.

Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting


அப்போது என் வீட்டுக்கு வந்தேன்.

Photobucket - Video and Image Hosting

வாசலில் சுபா அக்காவின் பையன் அரவிந்த், விளையாடிக்கொண்டிருந்தான். கொஞ்சம் தள்ளி ஆட்டுக் குட்டி ஒன்றும் மேய்ந்தது. பையன், ஆட்டுடன் விளையாடுவது போல் படம் எடுக்கலாம் என்றால் ஆடு ஒத்துழைக்கவே இல்லை. பிறகு என் அம்மா ஆட்டைப் பிடித்துக்கொள்ள, ஒரு வழியாகப் படம் பிடித்தேன்.

Photobucket - Video and Image Hosting


சுபா அக்காவின் மகள் அபிநயா. இவள் பிறந்தபோது, அபிநயகுழலி என்ற புனைபெயரில் குட்டிக் கதை ஒன்று எழுதினேன்.

Photobucket - Video and Image Hosting


அபிநயாவும் அரவிந்தும்

Photobucket - Video and Image Hosting

அப்போது அங்கு இருந்த என் தம்பி (சித்தி மகன்) பாலாஜியுடன் அபிநயாவும் அரவிந்தும். அதிகாலை வெளிச்சத்தில் எடுத்தது.

Photobucket - Video and Image Hosting

மூத்த அக்கா மீராவின் மகள்கள் காயத்ரி, பிரீத்தி உடன் அபிநயா.

Photobucket - Video and Image Hosting

பிரீத்தி உடன் அபிநயா.

Photobucket - Video and Image Hosting


அம்மா செளந்திரவல்லி, மாடியிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தார்.

Photobucket - Video and Image Hosting

அப்பா குப்புசாமி, கட்டிலில் ஒய்யாரமாகப் படுத்திருந்தார்.

Photobucket - Video and Image Hosting

அக்கா சுபா என்ற வேதவல்லி அங்கு இருந்தார்கள்.

Photobucket - Video and Image Hosting

இரண்டே முக்கால் வயதில் என் பெற்றோருடன்


இது, 1978இல் என் இரண்டே முக்கால் வயதில் எடுத்தது. சென்னையில் உள்ள ஒரு புகைப்பட நிலையத்தில் இதை எடுத்துள்ளார்கள். 20 வயதிற்குள் என்னை அதிகப் புகைப்படங்கள் எடுக்கவில்லை. எடுத்த சிலவற்றையும் பத்திரமாக வைக்கவில்லை. அப்படிப் பார்க்கும்போது இந்தப் புகைப்படம்தான் இப்போதைக்கு என்னிடம் இருப்பதிலேயே சிறுவயதுப் புகைப்படம்.

இடமிருந்து வலமாக: பக்கத்து வீட்டுப் பையன் பாபு, அப்பா குப்புசாமி, அவர் கையில் என் தம்பி பிரசன்னா (10 மாதக் குழந்தை), அம்மா செளந்திரவல்லி, கீழே நிற்கும் பொடியன் நான். வேறு ஏதோ ஒன்றைத் தேடும்போது இந்தப் புகைப்படம் கிடைத்தது. படம் எடுக்கும் நேரத்தில் தலையை ஆட்டிவிட்டேனாம். அதனால் முகம் சரியாகத் தெரியவில்லை. இதைச் சரிசெய்ய முடியுமா என்றும் தெரியவில்லை. சரி என்று இன்னொரு படம் எடுத்திருக்கிறார்கள். அதில் நான் ஒழுங்காகத் தெரிந்துள்ளேன். தொப்பி போட்ட என் தம்பி தலையை ஆட்டியிருக்கிறான். அந்தப் படம், ஒரு சமயத்தில் எரிந்துவிட்டதாம். இனி மீட்க முடியாத அந்தக் காலத்தை இந்தப் படத்தின் மூலம்தான் வாழ முடியும்.