
ஓட்டுநர் இருக்கைக்குப் பின்புறம், அந்த ஓட்டுநரின் பெயர், முகவரி, ஓட்டுநர் உரிம எண், உரிம காலம், அவருடைய குருதி வகை எண் ஆகியவற்றை எழுதி வைத்திருந்தார்கள். அத்துடன் அந்த வட்டார காவல்துறை அதிகாரியின் கையொப்பமும் முத்திரையும் இடம் பெற்றிருந்தது.
இதன் மூலம் ஓட்டுநரைப் பற்றிய விவரங்களைப் பயணிகள் தானாகவே தெரிந்துகொள்ள முடிகிறது. ஓட்டுநரின் மீது நம்பிக்கை பிறக்கிறது. உரிமம் பெற்றவர்தான் வண்டியை ஓட்டுகிறாரா? தன் வண்டியைத்தான் அவர் ஓட்டுகிறாரா? எனப் பல விவரங்களை அறிய முடியும். பல வகைகளில் பயனுள்ள இந்த முறையை இதர நகரங்களும் பின்பற்றலாமே!
1 comment:
நல்ல பதிவு... விரைவில் எல்ல இடமும் வந்துவிடும் என்றே நினைக்கிறேன்
Post a Comment