Thursday, August 25, 2005

கவிதை உறவில் முதல் பரிசு



ஏர்வாடி இராதாகிருஷ்ணன் 33 ஆண்டுகளாகக் கவிதை உறவு அமைப்பை நடத்தி வருகிறார். மாதம்தோறும் கவிஞர் ஒருவரின் தலைமையில் கவிதை இரவு என்ற பெயரில் கவியரங்கம் நடத்தி, கவிஞர்களுக்கு முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் அளிப்பார். முதல் பரிசுக்குத் தேர்வுபெற்ற கவிதையை அவர் நடத்தும் கவிதை உறவு என்ற மாத இதழில் வெளியிடுவார்.

ஆண்டு முழுவதும் 12 மாதங்களில் எந்தக் கவிஞர் அதிகப் பரிசுகள் பெறுகிறாரோ அவருக்கு ஆண்டின் சிறந்த கவிஞர் என்ற முறையில் சிறப்புப் பரிசு அளிப்பார். அந்த வகையில் 1997 ஆம் ஆண்டின் சிறந்த கவிஞராக நான் தேர்வுபெற்றேன். அந்தப் பரிசை, கவிதை உறவின் ஆண்டு விழாவில் பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரி சம்பத்குமார் வழங்குகிறார். அருகில் ஏர்வாடியார், பாலசாண்டில்யன், விஜயகிருஷ்ணன், இளம்பாரி உ.கருணாகரன் ஆகியோர் உள்ளனர்.

No comments: