
நியூ செஞ்சுரி புத்தக நிலையம் நடத்தும் புத்தகக் காட்சி, சென்னை அம்பத்தூரில் நடந்து வருகிறது. அம்பத்தூர் ஓ.ட்டி.யில் (O.T. alias Old Township) பேருந்து நிலையத்திற்கு அருகில், இரவீந்திரன் மருத்துவமனைக்கு எதிரில் இந்தக் காட்சி, நடந்து வருகிறது.

ஜூலை 15 அன்று தொடங்கிய இந்தக் காட்சி, இன்னும் 6 மாதங்களுக்கு நடைபெற உள்ளது. 10 விழுக்காடு கழிவு தருகிறார்கள். 35 பதிப்பகங்களின் நூல்களைக் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

சாண்டில்யனின் சரித்திரப் புதினங்கள், ஜேகே நூல்கள் உள்ளிட்டவற்றைக் கேட்டு வாங்குகிறார்கள். பாட நூல்கள் வேண்டுமென்று நான் சென்றபோது ஒருவர் கேட்டார். அவர்களிடம் இல்லை. இல்லாத நூல்களைக் கேட்டால் என்ன செய்வீர்கள் என்று அங்கிருந்த கிருஷ்ணவேணி என்பவரிடம் கேட்டதற்கு, அதற்கென்று ஒரு குறிப்பேடு வைத்திருக்கிறோம்; வேண்டிய நூல்களை அதில் எழுதினால் ஒரு வாரத்திற்குள் அதைப் பெற்றுத் தருவோம் என்றார்.

நியூ செஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்ட இந்தியா 2020 என்ற கலாம் நூலின் மாணவர் பதிப்பையும் வெ.இறையன்புவின் படிப்பது சுகமே என்ற நூலையும் சேர்த்து ரூ.50க்குத் தருகிறார்கள். இவற்றின் அசல் விலை, ரூ.100/-
1 comment:
Dear Anna Kanna,
I would like to contact you. Pl. drop a mail to Ramki@Rajinifans.com and let me know ur contact No. My cell no. is 94444 53694
Post a Comment