Tuesday, August 29, 2006

ஒரு சிறிய விபத்து

இரு தினங்களுக்கு முன்பு சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஒரு பொதுயுந்து (லாரி), இரு சக்கர வாகனத்தின் மீது ஏறி விபத்துக்கு உள்ளானது. நல்லவேளையாக, இரு சக்கர வாகன ஓட்டிக்கு எதுவும் ஆகவில்லை. சற்று தொலைவில் சோகமாகத் தரையில் அமர்ந்திருந்தார்.



யார் மீது தப்பு என்று தெரியவில்லை. அவருடைய வண்டியின் பின் சக்கரத்தின் மீது, பொதியுந்தின் பின் சக்கரம் ஏறி நின்றிருந்தது.



நான் போனபோது காவல் துறையினர், இரு சக்கர வாகனத்தின் மீதிருந்து பொதியுந்தினை விலக்குவதற்காக அதைத் தள்ளிக்கொண்டிருந்தனர். பொதுமக்கள் ஒரு கை கொடுத்ததும் பொதியுந்து, அடம் பிடிக்காமல் கீழிறங்கியது.



வாகனத்தைக் காப்பீடு செய்திருப்பாரேயானால் வாகன ஓட்டிக்குப் பணம் திரும்பக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

No comments: