Sunday, August 13, 2006

வாசுகி ஜெயபாலன் இசை நிகழ்ச்சி

Photobucket - Video and Image Hosting

12.8.06 அன்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீ பார்வதி அரங்கில் வாசுகி ஜெயபாலனின் இசை நிகழ்ச்சி நடந்தது. ஈழக் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் மனைவியாரான வாசுகி, நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இசை ஆசிரியையாக உள்ளார். கணீரென்ற குரலில் பாட வல்லவரான இவர், கேட்பவரைக் கட்டிப் போடும் ஆளுமையுடன் உள்ளார்.

Photobucket - Video and Image Hosting

ஆகஸ்டு 12 அன்று நடந்த நிகழ்ச்சியில் ஜெயபாலனின் பாடல்களையும் வள்ளித் திருமணம் என்ற அவரின் காவியத்தையும் வாசுகி பாடிக் காட்டினார். பாவங்கள், சொற்களுக்கான அழுத்தங்கள் ஆகியவற்றுடன் இசையை நிகழ்கலையாகவே ஆக்கிக் காட்டினார்.

Photobucket - Video and Image Hosting

இவருடைய பாடல்களைத் தமிழ்சிஃபியில் நீங்கள் கேட்கலாம்.

Photobucket - Video and Image Hosting

எழுத்தாளர் திலகவதி ஐபிஎஸ், கலை விமர்சகர் இந்திரன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் இளையபாரதி உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.

மேற்கண்ட படங்களை எடுத்தவன் அடியேன்.

No comments: